ஈழத் தமிழர்

Thursday, September 28, 2006

மன்னிப்பதும்.. மறப்பதும்... அரவைணப்பதும்..

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சுவாமி விவேகானந்தர், மேற்குலக வெற்றிப் பயணத்ைத முடித்துவிட்டு இலங்ைக வழி இந்தியா திரும்புைகயில், 1897இல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்களில் இருந்து தமிழரான முஸ்லிம்களும், மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் ெகாழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915இல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்ைகப் பிரதமாரான, சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்ெடழுந்தனர்.
1927இல் காந்தியடிகளின் இலங்ைகப் பயணத்தின் போது சிங்களத் தீவிரவாதிகளுட் சிலர் காட்டிய எதிர்ப்புகளையும், ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸுமாக அளித்த ெநஞ்சார்ந்த வரவேற்பையும், இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்ெகாைடகளையும் மகாேதவ ேதசாய் விரிவாக எழுதி நூலாக்கியுள்ளார்.
மலையகத் ேதயிலைத் ேதாட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் ெதாழிலாளர்களையும், ெகாழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற ேகரளத்துத் ெதாழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு ெதாடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920களில் சிங்களத் தீவிரவாதியான ஏ. இ. குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அைடந்தன.
மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் ேகாரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் ேநாக்குடன், ேகரளப் பொதுவுைடமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ. ேக. ேகாபாலன், 1939இல் ெகாழும்புக்குச் சென்றார். வெள்ளவத்ைதயில் அவர் பங்ேகற்ற மேதினக் கூட்டத்ைத மலையாள எதிர்ப்பாளரான சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940களின் ெதாடக்கத்தில் மலையாளிகள் ெகாழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.
மலையகத் தமிழ்த் ெதாழிலாளருக்குச் சிங்களவர் ெதாடர்ச்சியாக இழைத்து வந்த ெகாடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவகர்லால் ேநரு இலங்ைகக்குச் சென்றார். இலங்ைக இந்தியக் காங்கிசை நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று, ெகாழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்ேகற்று உரையாற்றிய கூட்டத்ைதச் சிங்களத் தீவிரவாதியான ஏ. இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.
1948இல் இலங்ைக விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் ேதாட்டங்களை வளப்படுத்திய ெதாழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும்.
மலையகத் தமிழ்த் ெதாழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு. அக்காலத்தில் இந்தியத் தூதராக இருந்த சி. சி. ேதசாயை இலங்ைக அரசு ேகவலாமாக நடத்தியது, அவருக்கு எதிரான போரட்டங்களைச் சிங்களத் தீவிரவாதிகள் முடுக்கினர்.
ேநரு காலத்தில் பல முறை முயன்று ேதாற்றைத, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்ைக பெற்றுக் ெகாண்டது. சிறீமாவோ - சாஸ்திரி மற்றும் சிறீமாவோ - இந்திரா ஒப்பந்தங்கள், சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் ெகாள்ைககளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும், கச்ச தீவை இலங்ைக எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக் ெகாண்டதல்லவா?
மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஓப்பியதற்கு நன்றியாக, 1977இலும் 1983இலும் இனக்கலவரத்தில், ெகாழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் ெகாலைசெய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் கைடயர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் ெகான்று குவித்தனர்.
கச்ச தீவைக் ெகாடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி ேகட்டுக் ெகான்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதராமாக்கி, வலைகளை அறுத்ெதறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்ைகக் கடற்பைட பறித்ெதடுத்துச் சென்று வருகிறது.
1971 ஏப்பிரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா பைடகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப் போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் ெகாழும்பு விமான நிலையத்தில் தங்கிப் போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்கழையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதலாகக் கட்டுப்படுத்தியது.
1983 முதலாக ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது, தூதரக வாகனங்கள் ெகாளுத்தப்பட்டன. இந்திய எதிர்ப்புக் ேகாஷங்களும் ஊர்வலங்களும் வழமையாகின. இந்தியப் பொருள்களைச் சிங்களவர் வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற தைடயையும் ஜேவிபி நைடமுறைக்குக் ெகாணர்ந்தது.
1987இல் இலங்ைக இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் ெகாழும்பு செல்கிறார். அப்போைதய பிரதமாரான பிமேதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டுக் ெகாழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, ேநரு பேசிய கூட்டத்ைத 1939 ஜூலை 26இல் குலைக்க வந்த ஏ. இ. குணசிங்கா.
ெகாழும்பில், குடியரசுத் தலைவர் மாளிைக வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிைட. கடற்பைடச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அைடக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.
பிரேமதாசா குடியரசுத் தலைவராகிறார். இந்தியாவுக்கு எதிராகப் போர்க்ெகாடி தூக்குகிறார். மாலை தீவில் நடப்பதாக இருந்த சார்க் மாநாட்ைடக் குழப்புகிறார். இந்தியத் தூதர் தீட்சித்ைதப் பிரேமதாசா பலமுறை அவமதித்த நிகழ்வைத் தீட்சித்தின் நினைவுக்குறிப்பு நூல்களில் காணலாம்.
1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் பைடயின் வெறியாட்டமே காரணமாகும்.
ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐநா. தலைமைச் செயலாளராக வெற்றி பெறமுடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலெகங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது சிங்கள அரசு.
விவேகானந்தர் காலம் ெதாடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியற் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்ேட பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் ெகாள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, ெதாடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா.
இந்த மாதத்தில் இலங்ைகப் பைடக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் ெகாடுத்துள்ளது. இன்னா செய்தாரை மறப்பதும் மன்னிப்பதும் அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணேணாடு கலந்த மரபுகள். 999 மனித தலைகளைக் ெகாய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதானாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.
இந்தியாவே ஆயுதங்களைக் ெகாடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது; அைதத் ெதாடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர்.
13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்ேதவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், பைடப்பாளிகள் வரை, கடந்த இருபத்ைதந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பைகமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது, ெகாண்டும் ெகாடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்ெகாண்டு, வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் முகத்தில் கரிபூச எப்பொழுதும் எவ்விடத்தும் நினைக்காத ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கும் குறுங்காலம் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் பொருந்தாச் செயல்களையும் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் ஒருவரை ஒருவர் அரவைணப்பதும் ஈழத்தமிழரதும் இந்தியாவினதும் கடனல்லவா?
100 ஆண்டுகளாகத் ெதாடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல, இைடயில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.

ஈழத் தமிழ் மாணவர் - இந்தியாவில் கல்வி கற்றல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நைடபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த சுவாமிநாதன் உள்ளிட்ட, சிதம்பரத்தில் சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் ெகாணர்ந்து ெதாடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.
கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி ேதசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் ெநடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
பாண்டித்துரைத் ேதவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்ைத நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் ெதாடங்க முயன்றபோது, அவ்வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பெற, யாழ்ப்பணத்துக்குச் செய்தி அனுப்பி, அங்கிருந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பாடத் திட்டங்களைப் பெற்று, மதுரையில் வகுப்புகளைத் ெதாடங்கினார்.
ஈழத்து வடமராட்சி நீதிபதி கதிரவேற்பிள்ளை ெதாகுத்த அகராதியை மதுரைத் தமிழ்ச சங்கத்தினர் பதிப்பித்து வெளியிட்டனர்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவரும் யாழ்ப்பணத்தவர்களே; ஒருவர் கறோல் விசுவநாதபிள்ளை; மற்றவர் சி. வை. தாமோதரம்பிள்ளை.
சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர்களே பின்னர் இலங்ைக அரசியலில் புகழ் பூத்த சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகிய இருவரும்.
கும்பேகாணம் கலைக் கல்லூரியில் வெள்ளிநாக்கர் சீனிவாச சாஸ்திரியாருக்கு ஆங்கிலம் கற்பித்தவர் யாழ்ப்பணத்தவரான பேராசிரியர் ஹென்ஸ்மன். அவரின் வழிவந்தருள் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதுடன், அப்பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகவும் கடமையாற்றினார். மற்றறொருவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியியலாளராக இருந்தமையால், அவர் பெயரில் தியாகராய நகரில் ஹென்ஸ்மன் சாலை அமைந்தது, அதுவே கண்ணதாசன் சாலையாக இன்று மாறியுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைக்கவேண்டுமா என ஆராய்ந்த குழுவின் முன்சென்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் அத்தைகய பல்கலைக் கழகம் அமைய வேண்டிய அவசியத்ைத வலியுறுத்தியவர் மட்டக்களப்பு விபுலானந்த அடிகள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் தலைமைப் பேராசிரியரும் அவரே.
கிண்டியில் பொறியியல் கல்லூரியும் சென்னையில் மருத்துவக் கல்லூரியும், வேலூரில் ெதன்னிந்திய திருச்சைபயின் கிறித்தவ மருத்துவக் கல்லூரியும் ெதாடங்கிய காலங்களில் அவ்வக் கல்லூரிகளின் முதலாவது ெதாகுதி மாணவர் குழுக்களில் யாழ்ப்பாணத்து மாணவர் பலர் இடம் பெற்றிருந்தனர்.
நல்லூரின் டாக்டர் ஈ. எம். வீ. நாகநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபின் யாழ்ப்பாணம் திரும்பினார். தந்ைத செல்வாவுடன் இைணந்து தமிழர் விடுதலைப் போராளியானார். சென்னையின் இன்றைய புகழ் பெற்ற ேதால் மருத்துவ வல்லுநர் டாக்டர் ஏ. எஸ். தம்பையா ஈழத்துக் காரைநகரில் இருந்து வந்தவர் சென்னையிலேயே படித்தபின் இங்ேகயே தங்கிவிட்டார்.
தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்களான ேக. ஆர். சீனிவாச ஐயங்கார் (பிரேமா நந்தகுமாரின் தந்ைதயார்), கிருஷ்ணசாமி ஐயர் (மகாகவி பாரதியாரின் உறவினர்) நாவலர் சோமசுந்தர பாரதியார், மகாராஜபுரம் சந்தானம் போன்ற பலரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக்கினர்.
ஈழத்தவர்களான, ம. க. வேற்பிள்ளை பொன்னம்பலபிள்ளை, முத்துத்தம்பிப்பிள்ளை, ெதன்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (திரு. வி. க. வின் ஆசிரியர்) பொன் முத்துக்குமரன் போன்ற பலர், தமிழகக் கல்விநிலையங்களில் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். பொன். முத்துக்குமரனின் தமிழ் மரபு நூலின் ஒரு பகுதியைப் பெயர்த்துச் சென்னைப் பல்கலைக் கழக இளங்கைலப் பட்ட வகுப்புக்குக்கான பயன்பாட்டுத் தமிழ்ப் பாடநூலில் ஈராண்டுகளின் முன்னர் சேர்த்துள்ளனர். 1960களில் சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்திரன் ேதவேநசன் யாழ்ப்பாணத்து நீர்வேலியை அடியாகக் ெகாண்டவர்.
யாழ்ப்பாணத்தவரான கனகசுந்தரம்பிள்ளையிடம் இராமேஸ்வரத்தில் ஆங்கிலம் கற்றைதத் தன் வாழ்க்ைக வரலாற்றில் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில், இலங்ைக மாணவர் சங்கத்தின் தலைவராக 1965-66 ஆண்டுகளில் நான் கடமையாற்றிய காலங்களில், சங்கத்தில் 1,200 உறுப்பினர் இருந்தனர். தமிழகம் முழுவதும் 2,000 மாணவர் வரை கல்வி கற்றனர். தவிர, ெகால்கத்தா, மும்பை, புனே, திருவனந்தபுரம், தில்லி, வரணாசி என இந்தியா முழுவதும் பரந்து கல்வி பயின்றனர்.
யாழ்ப்பாணத்தவரான ஓவியச் செய்தியாளரும் மாமனிதருமான, சிரித்திரன் சிவஞானசுந்தரம் மும்பையில் இன்றைய சிவசேனைத் தலைவர் பால் தக்கரேயுடன் ஒரே கல்லூரியில் சமகாலத்தில் கட்டட வரைகலையும் ஓவியமும் பயின்றவர்.
மட்டக்களப்பின் பாலுமேகந்திரா, புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று, திரைக் கலையில் புலத்துறை முற்றியவராய், சிறந்த இந்தியத் திரைப்படங்களைத் ேதர்வுசெய்யும் இந்திய அரசின் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்.
புனேயின் வேளாண் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் 4-5 மாணவர்களுக்குக் குறையாமல் ஈழத்துத் தமிழ் மாணவர் பயின்ற காலங்களுண்டு.
வரணாசியின் இந்துப் பல்கலைக் கழகத்தில் பயின்ற கி. இலட்சுமண ஐயரைக் குறிப்பிடுவதா, ெகால்கத்தா சாந்திநிேகதனத்தில் பயின்ற மங்களம்மாளைக் குறிப்பிடுவதா, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ெதாடங்கிய காலம் முதலாகவும் ருக்மணி ேதவியின் கலாச்சேத்திரம் ெதாடங்கிய காலம் முதலாகவும் அவ்வ்விடங்களில் பயின்று வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈழத்து மாணவரைக் குறிப்பிடுவதா, இன்னும் விவரம் ெதரியாத புகழ்பெற்ற பலரைக் குறிப்பிடுவதா? எைதச் சொல்ல? எைத விட?
தமிழகத்துடன் சிறப்பாகவும், இந்தியத் துைணக் கண்டத்துடன் பொதுவாகவும் ஈழத்தவர் ெகாண்ட கல்வித் ெதாடர்புகளுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்ேதவனாரும் சாட்சி. இன்றைய அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரமும் சாட்சி.
இவ்வாறாக ஈழத்தவரும் தமிழகத்தவரும் ெகாண்டும் ெகாடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்ெகாண்டு வரும் கல்வித் ெதாடர்புகள் வரலாற்றுப் பெருமை உைடயன. இன்றளவோடு நிற்காமல் காலங் காலமாகத் வரலாறாகத் ெதாடரப் போகின்ற பெருமையும் ெகாண்டன. பார்க்கப் போனால், ஈழத்தவருக்குத் தமிழகத்தில் கல்விகற்க ஓரளவு உரிமை காலங்காலமாக இருந்து வருகிறது.
1950 முதலாக:
பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்தியாவெங்கும் ஈழத்து மாணவருக்குத் திறந்ேத இருந்தன. அடிப்பைடத் தகுதிகள் ஒருவருக்கு இருக்குமானால் மேற்கண்ட படிப்புக்காக, எந்தக் கல்வி நிலையத்திலும் மாணவராகச் சேரலாம். இந்திய அரசும் மாணவருக்கான பல்முறைபுகு நுழைவு ெகாடுத்து ஈழத்து மாணவரின் கல்வி உரிமையை உறுதி செய்தது.
ெதாழில்நுட்பத் துறையிலும் (சிற்பம், சித்த-ஆயுர்வேத மருத்துவம்) நுண் கலைகளிலும் (நாகஸ்வரம், தவில், குரலிசை, நடனம்) சமயக் குருக்கள் துறையிலும் (ஓதுவார், அபரக் கிரியையாளர், வேதாகமம் பயில்வோர்) குருகுல முறைப் பயிற்சிக்காகத் தமிழகம் வருவோர் காலாதிகாலமாகத் தத்தம் குருவையோ குருகுலத்ைதயோ தாமே ேதர்வதும் ஒப்புதல் பெறுவதும் பயிற்சி பெறுவதும் முறை சாராக் கல்வியாதலால் அரசின் தலையீடு இருப்பதில்லை, நுழைவு வழங்குவதிலும் இந்திய அரசு தாராளமாகவே நடந்து வருகிறது.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில்நுட்பக் கல்விகளுக்கு ஈழத்து மாணவர் ேநரடியாகச் சேரமுடியவில்லை. அத்துறைகளில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் தில்லியில் உள்ள நடுவண் அரசின் ஒதுக்கீடுகளுக்குள் வெளிநாட்டு மாணவர் சேர்க்கப் பட்டனர். தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, இந்தியா வெங்கணும் உள்ள கல்வி நிலையங்களுக்குத் தில்லியில் உள்ள நடுவண் அரசே வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்ைகயைத் தீர்மானித்தது.
நடுவன் அரசின் வெளிநாட்டமைச்சில் அயலக மாணவருக்காக ஒரு பிரிவு; அந்தப் பிரிவின் அலுவலகம் தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ளது. இந்தியத் ெதாழில் நுட்பக் கல்வி நிலையங்களில் அயல்நாட்டு மாணவர் சேர்க்ைகயை இந்தப் பிரிவு ஒருங்கிைணக்கிறது.
இந்தியாவிலுள்ள எந்த ஒரு ெதாழில் நுட்பக் கல்வி நிலையத்தில், அதுவும் அரசுகள் நடத்துகிற ெதாழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் இந்த அலுவலகமே ஒற்றைச் சாரளமாக இருக்கிறது. வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி, மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர் சேர்க்ைக இந்தப் பிரிவுள் அடங்குவதில்லை.
தில்லி சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று நிரப்பியோ, ெகாழும்பில் உள்ள தூதரகத்தில் படிவத்ைதப் பெற்று நிரப்பியோ, தாமாகவே பணம் ெகாடுத்துப் படிக்கும் ஈழத்து மாணவர், ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பித்து இடம் பெற்று, மருத்துவ, பொறியியல், வேளாண், கால்நைடப் பட்டப் பயிற்சிகளை மேற்ெகாண்டனர்.
ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஆண்டுேதாறும் வழங்கும் புலமைப் பரிசில்கள் பெற்று, இந்தியா வந்து ெதாழில்நுட்பக் கல்வி கற்றுத் துறைபோகும் ஈழத்து மாணவரும் உண்டு. அத்தைகய புலமைப்பரிசில் பெற்றுச் சென்னையில் படித்தவருள் நானும் ஒருவன்.
1983-1990 காலப்பகுதி:
இந்தப் பின்னணியில், 1983க்குப் பின்னதான ஈழத்து மாணவரின் நிலையை ேநாக்கவேண்டும். இலட்சக் கணக்கான எண்ணிக்ைகயில் ஈழத்தவர் ஏதிலிகளாக வரத் ெதாடங்கியதும் தமிழகம் தன் கல்விக் கூடங்களின் கதவுகளை மிக அகலமாகத் திறந்து, அவர்களுக்கு எந்த வகுப்பிலும் எவ்விதத் தைடயுமின்றி இடங்ெகாடுக்கலாம் என அறிவித்தபொழுது, ஈழத்தமிழர் ெநஞ்சங் குளிர்ந்தது.
ஆண்டு 8 வரை சேர்பவர்களிடம் எந்த முன் கல்விச் சான்றும் ேகட்காமல், சேர்க்ைகத் ேதர்வும் வைக்காமல் வயதுத் தகுதியை மட்டும் ெகாண்டு சேர்க்குமாறும் எந்த ஒரு வகுப்புக்கும் அரசு ஒப்பிய இட எண்ணிக்ைகக்குமேல் 20% வரையான எண்ணிக்ைக வரை ஈழத்து மாணவரைச் சேர்க்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
9-12 ஆண்டுகள் வரையான வகுப்புகளுக்கு, கல்வித் துறையிடம் மாணவர் சென்று தன்னிலை விளக்கம் கூறி, கல்வித் துறையின் கடிதத்ைதப் பெற்று வருவோரை அேத எண்ணிக்ைக அதிகரிப்பில் எப்பள்ளியும் சேர்க்கலாமெனத் தமிழக அரசு அறிவித்தது.
ெதாழில்நுட்பக் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் சேர்க்ைக ெதாடர்பாக, ஈழத்து மாணவருக்கு இட ஒதுக்கீடுகளைத் தமிழக அரசு அறிவித்தது. தில்லி நடுவண் அரசின் ஒதுக்கீடுகளும் ெதாடர்ந்தன.
தமிழக அரசின் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 45, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 20, வேளான் கல்லூரிகளில் 10, சட்டக் கல்லூரிகளில் 5, கால்நைடக் கல்லூரியில் 1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என்ற எண்ணிக்ைகயில் 1984 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் சேர்க்ைக ெதாடங்கியது. 1990 ஆனியில் ெதாடங்கிய கல்வியாண்டு வரை இந்த ஒதுக்கீடு ெதாடர்ந்தது.
1991-1995 காலப் பகுதி:
1991 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் எந்தக் கல்வி நிலையத்திலும் எளிதாகச் சேரமுடியாத சூழ்நிலை உருவானது. எனினும் பள்ளிகளிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் அந்தந்தச் சூழ்நிலைக்ேகற்ப மாணவர் சேர்க்ைககள் நடந்தன.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வழங்கிய ஒதுக்கீட்ைட உடனடியாக அரசு நிறுத்தியது.
ஆனாலும் தில்லியிலுள்ள வெளிநாட்டமைச்சின் மாணவருக்கான அலுவலகம், வழமைபோலத் தாமே பணம் செலுத்தும் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் புலமைப் பரிசில் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கி வந்தது. ஈழத்து மாணவர் பலர் தமிழகக் கல்லூரிகளில் இடம் பெற இந்த ஒதுக்கீடு உதவியது.
ஈழத்து மாணவர் சேர்க்ைகயில் இந்த மந்த நிலை 1995 வரை ெதாடர்ந்தது.
1995-2000 காலப் பகுதி:
1995 ஆனியில் தமிழகத்தில் பதவிக்கு வந்த அரசின் தாராளப் போக்கினால், மீண்டும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில் நுட்பக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடுகளைப் புதுப்பித்து, கல்வித் துறை ஆைண வழங்கியது. பொறியியலுக்கு முன்பு வழங்கிய 45 இடங்கள் 25 ஆகக் குறைந்தன. மருத்துவத்தில் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நைட 1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என ஒதுக்கிய இடங்கள் ஈழத்து மாணவருக்குக் கிைடத்தன.
தில்லியின் அயலகத் துறை வழங்கிய ஒதுக்கீடுகளும் புலமைப் பரிசில்களும் ஈழத்து மாணவரின் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு உதவின.
புதிய அரசின் மாணவர் சேர்க்ைகக் ெகாள்ைகயால், அனைத்து நிலைக் கல்வி நிலையங்களும் உற்சாகத்துடன் ஈழத்து மாணவரைச் சேர்க்கத் ெதாடங்கின. அதுமட்டுமல்ல தனியார் மருத்துவக் கல்லூரிகள், போரூர், சிதம்பரம், சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் வந்ததால், வசதி பைடத்த ஈழத்து மாணவருக்கு வாய்ப்பாக அவை அமைந்தன. பல் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றைத் தனியார் ெதாடங்கினர். அங்கும் ஈழத்து மாணவர் பலர் சேர்ந்தனர். பொறியியல் கல்லூரிகள் பலவையும் தனியார் ெதாடங்க, வசதி பைடத்த ஈழத்து மாணவர் அங்கும் பெரும் எண்ணிக்ைகயில் சேர்ந்தனர்.
மழலைப் பள்ளி ெதாடக்கம் பட்டமேற்படிப்பு ஈறாக, துறைெதாறும் துறைெதாறும் தமிழகம் முழுவதும் எவ்வித இடர்ப்பாடும் இன்றி ஈழத்து மாணவர் சேர்ந்து படித்த காலப் பகுதி இஃதாம். எனினும் மருத்துவப் பட்டமேற்படிப்புக்கு நடுவண் அரசின் மருத்துவத் துறை கட்டுப்பாடு விதித்து வந்தது.
2000-2006 காலப் பகுதி:
2000ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மீண்டும் ஈழத்து மாணவரின் ெதாழில் நுட்பக் கல்விக்கான இட ஒதுக்கீடுகளில் பின்னைடவு ஏற்பட்டது.
ெதாழில்நுட்பக் கல்விச் சேர்க்ைகக்கான தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் ெகாள்ைகயால் பாதிப்புற்ற தமிழகத்ைதச் சேர்ந்த மாணவி ஒருவர், தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடுகளை மாற்றியமைக்கக் ேகாரி நீதிமன்றத்துக்குப் போனார்.
ஈழத்து ஏதிலி மாணவருக்கான இட ஒதுக்கீடு எண்ணிக்ைககளையும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் ெகாண்டுவந்தனர்.
தமிழக மாணவியின் விண்ணப்பத்ைத எடுத்து ேநாக்கிய சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நீதி வழங்கியது. அந்தத் தீர்ப்பில், இலங்ைக மாணவருக்கான இட ஒதுக்கீட்ைடச் தமிழக அரசும் நடுவண் அரசும் சேர்ந்து தீர்க்கவேண்டும் என்ற வரிகளைச் சேர்த்தது. இத்தீர்ப்பால் ெதாழில்நுட்பக் கல்விக்கான தமிழக அரசின் 1984-1990, 1995-2000 காலப்பகுதிகளின் ஒதுக்கீடுகள் ஓய்ந்து போயின.
தில்லியின் அயலுறவுத் துறையின் ஒதுக்கீடுகள் மட்டும் ெதாடர்கின்றன. மிகச் சிலரான எண்ணிக்ைகயில் ஈழத்து மாணவர் ெதாழில் நுட்பக் கல்விக்குத் ேதர்வாகின்றனர்.
அனைத்துப் பள்ளிகளிலும் தகுதிக்ேகற்பச் சேர்வதில் ஈழத்து மாணவருக்குத் தைடயில்லை.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஈழத்து மாணவர் சேர்க்ைகக்குப் பாதிப்பில்லை.
வசதி பைடத்த ஈழத்து மாணவர் தனியார் மருத்துவ, பல்மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரத் தைடயில்லை.
தமிழக அரசு வழங்கிய ஈழத்து மாணவருக்கான (பொறியியல் 45, மருத்துவம் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நைட1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள்) ஒதுக்கீடுகளுக்குத் தைட.
மருத்துவப் பட்டமேற்படிப்புச் சேர்க்ைகக்கு நடுவண் அரசு ஈழத்து மாணவருக்கு ஒதுக்கீடு தருவதில்லை.
ஈழத்தமிழரின் எழுத்தறிவு 99.5%. கல்வியே அவர்களது கண். கல்விக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அளவற்றன. ஈழத்தமிழர் பகுதிகளில் கல்விக் கூடங்களின் எண்ணிக்ைக ஏராளம். ஏதிலிகளாக வந்தவர்களைத் தமிழகம் தாங்கி அரவைணத்துக் கல்வியைத் ெதாடர அளிக்கும் ஆதரவுக்கு ஈழத்தமிழர் நன்றிக் கடனுைடயர்.
ஏதிலியராக வந்ததால் பெற்ற ஒதுக்கீடுகளைத் தமிழக அரசு சட்டமாக்கி, ஈழத்தமிழர் என்றென்றும் தமிழகத்தில் கல்விக்கு உரித்துைடயர் என்பைத உறுதி செய்தால், தமிழக ஈழக் கல்வித் ெதாடர்புகள் மேலும் ெநருக்கமாகும். பாடத்திட்டங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் வரும். ஹென்ஸ்மன், வேற்பிள்ளை கனசுந்தரம் போன்றோர் வருவர். ெகாண்டும் ெகாடுத்தும் கல்வியில் ஒருவரை ஒருவர் ஆட்ெகாள்வோம்.