தமிழீழமும் மேலை நாடுகளும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மேலைநாடுகளுக்கு இலங்கையே முதல் பரிசோதனைக் கூடமல்ல. எதியோப்பியா (எறிற்றீரியா), பாலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கொரியா (வட-தென்), சோவியத் யூனியன் (மத்திய ஆசிய நாடுகள்), யூகோஸ்லாவியா, கொலம்பியா, சூடான் (வட-தென்), இந்தோனீசியா (தைமூர்), சீனா (திபெத், தைவான், ஹொங்கொங், மக்காவோ), ஈராக் (குர்து), சைப்பிரஸ், ஸ்பெயின் (பாஸ்க்கு), இந்தியா (காஷ்மீர், நாகலாந்து, மிசோராம்) போன்ற பல நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் அவர்களின் சார்பாக இஸ்கண்டிநேவிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க்கு, பின்லாந்து ஆகிய நாடுகள், உலக நாடுகளில் அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தன. ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள், இஸ்கண்டிநேவிய நாடுகளுக்குப் பின்னே நின்று வலிவு கொடுத்தன.
அமைதியை நிலைநாட்டுவது ஒரு நோக்கமாக இருந்தாலும்,
-மேலைநாட்டு நுகர்ச்சிப் பொருள்களுக்குச் சந்தையை விரிவாக்கல்,
-வளரும் நாடுகளின் கனிம வளங்களைக் குறைந்த விலையில் பெறுதல்,
-ஆங்கில, பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளை உலக மொழிகளாக்கல்,
-ஆசிய ஆபிரிக்காவைக் கிறித்து மதமயமாக்கல் என்ற போப்பாண்டவரின் பிரகடனங்கள்,
-மேலைநாட்டு மக்களாட்சி முறையை ஏனைய மக்கள் ஏற்குமாறு வலியுறுத்தல்
-அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சுப் படைத்தளங்களை உலகளாவி நிலைகொள்ளச் செய்தல்,
-மேலைநாடுகளின் மறைமுக மேலாதிக்கத்தை ஏனைய நாடுகள் ஏற்குமாறு பார்த்துக் கொளல்,
-மேலை நாடுகளைவிட வேறெவரும் படைபலத்தில் வளராமல் செய்தல்,
-தாம் கண்டுபிடிக்கும் புதிய ஆயுதங்களைச் சோதிக்கும் தளமாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தல்.
ஆகியனவும் பிறவும் அவர்களின் அடிப்படை நோக்கங்களாக இருந்தன.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பெரிய நாடுகளாயுள்ள அரசுகள் தடையாக இருந்தன. எனவே, பெரிய நாடுகளை உடைத்தோ, பிரித்தோ, சிறிய நாடுகளாக மாற்றுவதே அவர்களது அமைதி நோக்க அணுகு முறைகளுள் ஒன்று.
சோவியத் யூனியன் உடைந்தது. யூகோஸ்லாவியா உடைந்தது. எரிற்றீறியா பிரிந்தது. தைமூர் பிரிந்தது. இஸ்ரேலை ஏற்கும் பாலஸ்தீனம் உருவாகி வருகிறது. சூடானின் கிறித்தவத் தென் பகுதி, தன்னாட்சியை நோக்கிப் போகிறது, ஈராக்கில், சியாக்கள், சன்னிகள், குர்துகள் தனித்தனி அரசுகளை அமைத்து இணைப்பாட்சியை அமைத்துள.
மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய இனக்குழுக்களுக்கு மேலை நாடுகள் உதவுவது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
அமெரிக்காவில் கறுப்பர், மாயா நாகரீகத்தார் (செவ்விந்தியர்), எஸ்கிமோவினர், ஐரோப்பாவில் வட அயர்லாந்தினர், பிளெமிங்கோ மொழியினர், பாஸ்க்குகள், யப்பானின் அயினோ இனத்தவர், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர், இறியூனியனின் தமிழர் போன்ற தேசியக் குழுக்கள் பலவற்றையும் உட்பிரிவுகளையும் இவர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதை எவரும் எடுத்துக் கூறுவதில்லை.
கிறித்தவர்களைக் காக்கத் தைமூரைப் பிரித்தவர்கள், இந்துக்களைக் காக்க, பாலியைப் பிரிக்கவில்லை.
மக்களாட்சியைப் பரப்ப விழைபவர்கள், தங்களுக்குச் சாதகமான வலதுசாரிச் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றனர்.
வளரும் நாட்டுக் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குபவர்கள், தங்களது அறிவியல் தொழில்நுட்பங்களுக்குப் புலமைச் சொத்துக் காப்பு மூலம் வறிய நாடுகளிடம் பெருந் தொகைகளைக் கேட்பதுடன், வறியநாடுகளின் நெடுநாளைய கண்டுபிடிப்புகளைத் தமதாக்கிப் புலமைச் சொத்துரிமை கொண்டாட முயல்கின்றனர்.
இலங்கையில், வெளியார் தலையீட்டைத் தமிழர் நாடாமல் 35 ஆண்டுகளாகத் (1948-1983) தொடர்ந்து போராடி வந்தனர். 1983இல் சிங்கள இனவெறியின் கோரத் தாண்டவத்தைத் தாளாத தமிழர், ஏதிலிகளாயினர், பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழப் பத்து இலட்சம் தமிழர் வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பசிபிக் நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
மேலைநாடுகளின் கவனத்தை இப் புலம்பெயர்ப் படையெடுப்பு ஈர்த்தது. அங்கு போன தமிழரும் வாழாவிருக்கவில்லை. அதன் பெறுபேறாக 1995ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க நேரடியாக வியூகங்கள் வகுக்கத் தொடங்கின.
முதலில் வந்த பிரித்தானியாவின் முன் மொழிவுகள், சிங்களவரை நோக்கியே அமைந்தன. ஒரு கட்சியினர் முன்மொழிவதை எதிர்க் கட்சியினர் மறுப்பதைக் காரணம் காட்டி, இனச்சிக்கலைத் தீர்க்க, முதலில் சிங்களவரிடையே கருத்தொருமை உருவாக வேண்டும் எனப் பிரித்தானியா சுட்டியது. பொக்ஸ் திட்டம் என அழைக்கப் பெற்ற இத்திட்டம், சிங்களவரின் வெறுப்புக்குள்ளானதால், பிரித்தானியாவைத் தீர்வுக் களத்திலிருந்து கொழும்பு வெளியேற்றியது.
மேலைநாடுகள் சார்பில், 1999இல் நோர்வே அணுகியது. 2000இல் நோர்வேயைச் சந்திரிகாவே அழைத்தார்.
2002 பெப்ருவரி 24இல் கொழும்பும் கிளிநொச்சியும் எழுதி ஏற்ற உடன்பாடு, கொழும்பு அரசின் ஆற்றாமையின் வெளிப்பாடு. இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளைத் தன்வசம் வைத்திருக்க முடியாதென்பதைக் கொழும்பு ஒப்புக்கொண்ட வரலாற்று ஆவணமே அந்த உடன்பாடு.
கொழும்பு இவ்வாறு ஒப்புக் கொண்டதற்கு மேலைநாடுகள் சாட்சியம் கூறின. இந்த ஆவணத்தை உருவாக்குவதிலும் ஒப்பம் பெறுவதிலும் மருத்துவச்சியாக மேலைநாடுகளின் சார்பாக நோர்வே பணிபுரிந்தது.
சிங்கள மேலாதிக்கத்தைப் போக்கி, தமிழரின் ஆதிக்கத்தைத் தமிழர் தாயகத்தில் நிறுவிய திறமையும் பெருமையும் சிறப்பும், பிரபாகரனையும் அவர் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையுமே சேரும்.
1972இல் தமிழரின் ஒப்புதலின்றி, அரசியலமைப்பைச் சிங்களவர் உருவாக்கினர். அப்பொழுதே தமிழரின் இறைமை தமிழரிடம் வந்து சேர்ந்தது. (படிக்க: மு. திருச்செல்வம் - ஈழத்தமிழர் இறைமை, மணிமேகலைப் பிரசுர வெளியீடு) தமிழரின் இறைமையைத் தன்னாதிக்கமுடைய அரசு மூலம் நடைமுறைப்படுத்தும் நெடும் பயணத்தின் முதற் படியே, 2002 பெப்ருவரியில் எழுதிய சிங்கள-தமிழ் உடன்பாடு.
மேலை நாடுகளின் அடிப்படை நோக்கங்களுள் சிக்காமல், தமிழ்த் தேசியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வள்ளுவ வழியாளர் (பார்க்க: திருக்குறள், பொருட்பால் - அரசியல்) பிரபாகரனே. இறைமையும் தன்னாதிக்கமும் உடைய மக்களாக, தம் தாயகத்தின் பெரும் பகுதிக்குள் ஈழத்தமிழர் 2002க்குப் பின் வாழ்கின்றனர்.
மேலைநாடுகளின் முயற்சியால் வந்த தீர்வு சிங்களவருக்கு அச்சத்தைத் தர, நோர்வேயையும் மேலைநாடுகளையும் வெளியேற்றச் சிங்களவர் 2005 தேர்தலில் வாக்களித்தனர். இந்தியாவை மீண்டும் உள்ளிழுக்க முயல்கின்றனர்.
சிங்களவர் சார்பாக உலகில் எந்த நாட்டின் எத்தகைய தலையீடு அமைந்தாலும் நீதியும் நியாயமும் தமிழர் பக்கமே அமையும். தமிழ்ப் போராளிகளின் உயிரீகைகள் தமிழ்த் தேசியத்தை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்லும். தமிழர் மரபு வழித் தாயகத்தில் (படிக்க: தமிழீழம் நாட்டு எல்லைகள், காந்தளகம் வெளியீடு) தமிழீழம் அமைவதே தீர்வு. இஃதை இன்றே, இப்பொழுதே உலகம் உணர்வதே விரைந்த மனித வளர்ச்சிக்கு வழி.
மேலைநாடுகளுக்கு இலங்கையே முதல் பரிசோதனைக் கூடமல்ல. எதியோப்பியா (எறிற்றீரியா), பாலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கொரியா (வட-தென்), சோவியத் யூனியன் (மத்திய ஆசிய நாடுகள்), யூகோஸ்லாவியா, கொலம்பியா, சூடான் (வட-தென்), இந்தோனீசியா (தைமூர்), சீனா (திபெத், தைவான், ஹொங்கொங், மக்காவோ), ஈராக் (குர்து), சைப்பிரஸ், ஸ்பெயின் (பாஸ்க்கு), இந்தியா (காஷ்மீர், நாகலாந்து, மிசோராம்) போன்ற பல நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் அவர்களின் சார்பாக இஸ்கண்டிநேவிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க்கு, பின்லாந்து ஆகிய நாடுகள், உலக நாடுகளில் அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தன. ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள், இஸ்கண்டிநேவிய நாடுகளுக்குப் பின்னே நின்று வலிவு கொடுத்தன.
அமைதியை நிலைநாட்டுவது ஒரு நோக்கமாக இருந்தாலும்,
-மேலைநாட்டு நுகர்ச்சிப் பொருள்களுக்குச் சந்தையை விரிவாக்கல்,
-வளரும் நாடுகளின் கனிம வளங்களைக் குறைந்த விலையில் பெறுதல்,
-ஆங்கில, பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளை உலக மொழிகளாக்கல்,
-ஆசிய ஆபிரிக்காவைக் கிறித்து மதமயமாக்கல் என்ற போப்பாண்டவரின் பிரகடனங்கள்,
-மேலைநாட்டு மக்களாட்சி முறையை ஏனைய மக்கள் ஏற்குமாறு வலியுறுத்தல்
-அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சுப் படைத்தளங்களை உலகளாவி நிலைகொள்ளச் செய்தல்,
-மேலைநாடுகளின் மறைமுக மேலாதிக்கத்தை ஏனைய நாடுகள் ஏற்குமாறு பார்த்துக் கொளல்,
-மேலை நாடுகளைவிட வேறெவரும் படைபலத்தில் வளராமல் செய்தல்,
-தாம் கண்டுபிடிக்கும் புதிய ஆயுதங்களைச் சோதிக்கும் தளமாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தல்.
ஆகியனவும் பிறவும் அவர்களின் அடிப்படை நோக்கங்களாக இருந்தன.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பெரிய நாடுகளாயுள்ள அரசுகள் தடையாக இருந்தன. எனவே, பெரிய நாடுகளை உடைத்தோ, பிரித்தோ, சிறிய நாடுகளாக மாற்றுவதே அவர்களது அமைதி நோக்க அணுகு முறைகளுள் ஒன்று.
சோவியத் யூனியன் உடைந்தது. யூகோஸ்லாவியா உடைந்தது. எரிற்றீறியா பிரிந்தது. தைமூர் பிரிந்தது. இஸ்ரேலை ஏற்கும் பாலஸ்தீனம் உருவாகி வருகிறது. சூடானின் கிறித்தவத் தென் பகுதி, தன்னாட்சியை நோக்கிப் போகிறது, ஈராக்கில், சியாக்கள், சன்னிகள், குர்துகள் தனித்தனி அரசுகளை அமைத்து இணைப்பாட்சியை அமைத்துள.
மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய இனக்குழுக்களுக்கு மேலை நாடுகள் உதவுவது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
அமெரிக்காவில் கறுப்பர், மாயா நாகரீகத்தார் (செவ்விந்தியர்), எஸ்கிமோவினர், ஐரோப்பாவில் வட அயர்லாந்தினர், பிளெமிங்கோ மொழியினர், பாஸ்க்குகள், யப்பானின் அயினோ இனத்தவர், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர், இறியூனியனின் தமிழர் போன்ற தேசியக் குழுக்கள் பலவற்றையும் உட்பிரிவுகளையும் இவர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதை எவரும் எடுத்துக் கூறுவதில்லை.
கிறித்தவர்களைக் காக்கத் தைமூரைப் பிரித்தவர்கள், இந்துக்களைக் காக்க, பாலியைப் பிரிக்கவில்லை.
மக்களாட்சியைப் பரப்ப விழைபவர்கள், தங்களுக்குச் சாதகமான வலதுசாரிச் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றனர்.
வளரும் நாட்டுக் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குபவர்கள், தங்களது அறிவியல் தொழில்நுட்பங்களுக்குப் புலமைச் சொத்துக் காப்பு மூலம் வறிய நாடுகளிடம் பெருந் தொகைகளைக் கேட்பதுடன், வறியநாடுகளின் நெடுநாளைய கண்டுபிடிப்புகளைத் தமதாக்கிப் புலமைச் சொத்துரிமை கொண்டாட முயல்கின்றனர்.
இலங்கையில், வெளியார் தலையீட்டைத் தமிழர் நாடாமல் 35 ஆண்டுகளாகத் (1948-1983) தொடர்ந்து போராடி வந்தனர். 1983இல் சிங்கள இனவெறியின் கோரத் தாண்டவத்தைத் தாளாத தமிழர், ஏதிலிகளாயினர், பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழப் பத்து இலட்சம் தமிழர் வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பசிபிக் நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
மேலைநாடுகளின் கவனத்தை இப் புலம்பெயர்ப் படையெடுப்பு ஈர்த்தது. அங்கு போன தமிழரும் வாழாவிருக்கவில்லை. அதன் பெறுபேறாக 1995ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க நேரடியாக வியூகங்கள் வகுக்கத் தொடங்கின.
முதலில் வந்த பிரித்தானியாவின் முன் மொழிவுகள், சிங்களவரை நோக்கியே அமைந்தன. ஒரு கட்சியினர் முன்மொழிவதை எதிர்க் கட்சியினர் மறுப்பதைக் காரணம் காட்டி, இனச்சிக்கலைத் தீர்க்க, முதலில் சிங்களவரிடையே கருத்தொருமை உருவாக வேண்டும் எனப் பிரித்தானியா சுட்டியது. பொக்ஸ் திட்டம் என அழைக்கப் பெற்ற இத்திட்டம், சிங்களவரின் வெறுப்புக்குள்ளானதால், பிரித்தானியாவைத் தீர்வுக் களத்திலிருந்து கொழும்பு வெளியேற்றியது.
மேலைநாடுகள் சார்பில், 1999இல் நோர்வே அணுகியது. 2000இல் நோர்வேயைச் சந்திரிகாவே அழைத்தார்.
2002 பெப்ருவரி 24இல் கொழும்பும் கிளிநொச்சியும் எழுதி ஏற்ற உடன்பாடு, கொழும்பு அரசின் ஆற்றாமையின் வெளிப்பாடு. இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளைத் தன்வசம் வைத்திருக்க முடியாதென்பதைக் கொழும்பு ஒப்புக்கொண்ட வரலாற்று ஆவணமே அந்த உடன்பாடு.
கொழும்பு இவ்வாறு ஒப்புக் கொண்டதற்கு மேலைநாடுகள் சாட்சியம் கூறின. இந்த ஆவணத்தை உருவாக்குவதிலும் ஒப்பம் பெறுவதிலும் மருத்துவச்சியாக மேலைநாடுகளின் சார்பாக நோர்வே பணிபுரிந்தது.
சிங்கள மேலாதிக்கத்தைப் போக்கி, தமிழரின் ஆதிக்கத்தைத் தமிழர் தாயகத்தில் நிறுவிய திறமையும் பெருமையும் சிறப்பும், பிரபாகரனையும் அவர் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையுமே சேரும்.
1972இல் தமிழரின் ஒப்புதலின்றி, அரசியலமைப்பைச் சிங்களவர் உருவாக்கினர். அப்பொழுதே தமிழரின் இறைமை தமிழரிடம் வந்து சேர்ந்தது. (படிக்க: மு. திருச்செல்வம் - ஈழத்தமிழர் இறைமை, மணிமேகலைப் பிரசுர வெளியீடு) தமிழரின் இறைமையைத் தன்னாதிக்கமுடைய அரசு மூலம் நடைமுறைப்படுத்தும் நெடும் பயணத்தின் முதற் படியே, 2002 பெப்ருவரியில் எழுதிய சிங்கள-தமிழ் உடன்பாடு.
மேலை நாடுகளின் அடிப்படை நோக்கங்களுள் சிக்காமல், தமிழ்த் தேசியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வள்ளுவ வழியாளர் (பார்க்க: திருக்குறள், பொருட்பால் - அரசியல்) பிரபாகரனே. இறைமையும் தன்னாதிக்கமும் உடைய மக்களாக, தம் தாயகத்தின் பெரும் பகுதிக்குள் ஈழத்தமிழர் 2002க்குப் பின் வாழ்கின்றனர்.
மேலைநாடுகளின் முயற்சியால் வந்த தீர்வு சிங்களவருக்கு அச்சத்தைத் தர, நோர்வேயையும் மேலைநாடுகளையும் வெளியேற்றச் சிங்களவர் 2005 தேர்தலில் வாக்களித்தனர். இந்தியாவை மீண்டும் உள்ளிழுக்க முயல்கின்றனர்.
சிங்களவர் சார்பாக உலகில் எந்த நாட்டின் எத்தகைய தலையீடு அமைந்தாலும் நீதியும் நியாயமும் தமிழர் பக்கமே அமையும். தமிழ்ப் போராளிகளின் உயிரீகைகள் தமிழ்த் தேசியத்தை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்லும். தமிழர் மரபு வழித் தாயகத்தில் (படிக்க: தமிழீழம் நாட்டு எல்லைகள், காந்தளகம் வெளியீடு) தமிழீழம் அமைவதே தீர்வு. இஃதை இன்றே, இப்பொழுதே உலகம் உணர்வதே விரைந்த மனித வளர்ச்சிக்கு வழி.
0 Comments:
Post a Comment
<< Home